துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துடியலூர்
கோவை தடாகம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் மாங்கரை சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆட்டோவில் ஒரு பெட்டியில் மறைத்து வைத்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்ததாக சோமையனூர் திருவள்ளுவர்நகர் பிருந்தாபன் வீதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 34), ஆனைகட்டி கே.கே.நகரை சேர்ந்த கவுதம் (29) ஆகியோரை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.