இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண பெண்களுக்கு இலவச அனுமதி; தொல்லியல் துறை அறிவிப்பு

மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண பெண்களுக்கு இலவச அனுமதி, எந்த வித கட்டண இன்றி பெண்கள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Update: 2021-03-08 02:11 GMT

மாமல்லபுரம்,

உலக மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த வித கட்டண இன்றி பெண்கள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

இந்த தகவலை மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்