திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச் சாவடி; பொதுமக்கள் ஓட்டளித்து விழிப்புணர்வு பெற்றனர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

Update: 2021-03-08 03:53 GMT
இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர், மாதிரி வாக்குச் சாவடியை பார்வையிட்டு மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் தன் வாக்கினைப் பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அதைத்தொடர்ந்து அவர், அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் மாதிரி 
வாக்குப்பதிவில் ஈடுபட்டு விழிப்புணர்வு அடைவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்