மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 8 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 441 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 230 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.