18 பேர் குணமடைந்தனர்

18 பேர் குணமடைந்தனர்

Update: 2021-03-09 15:36 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 224 ஆக உள்ளது.
நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்