திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. பேச்சுக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு
பொன்னேரி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது.;
கூட்டம் தொடங்கிய நிலையில் கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவராக பேசினர்.
திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் பேசும்போது:-
தி.மு.க. கூட்டணியில் 54 இடங்களை காங்கிரஸ் கட்சி கேட்டது. ஆனால் 25 தொகுதிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட 6 தொகுதிகளை நான் கேட்டு பெற்றிருக்க முடியும். இதற்கு யாரும் எதிராக பேசியிருக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்றது.