ஆலந்துறையார் கோவில் பங்குனி உத்திர திருவிழா
ஆலந்துறையார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருந்தவ நாயகி சமேத ஆலந்துறையார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடக்க இருக்கும் இந்த திருவிழாவில் வருகிற 25-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், அன்று வரை தினமும் இரவில் இடப வாகனங்களிலும், பூத வாகனத்திலும் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 27-ந் தேதி தேரோட்டமும், 28-ந் தேதி தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.