வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு அலங்காரம்
வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தலைவாசல்:
தலைவாசலை அடுத்த வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்து வருகிறார். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.