எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

Update: 2021-03-21 22:12 GMT
கே.கே.நகர், 

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஹெல்த் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கார் எலக்ட்ரீசியனான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்