காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுத்துணி வடிவமைப்பு; மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்தார்

காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுத்துணி வடிவமைக்கப்பட்டது.;

Update:2021-03-23 15:49 IST
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சீபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இதையடுத்து அவரது அறிவுறுத்தலின்படி, காஞ்சீபுரம் கைத்தறி நெசவாளர்களால், ‘நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு’ என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் பொறிக்கப்பட்டு பட்டு துணி வடிவமைக்கப்பட்டது. இப்பட்டு துணியினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் அறிமுப்படுத்தி பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் கணேசன், நெசவாளர் கோவிந்தராஜ், வடிவமைப்பாளர் உமாபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்