போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது

போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்;

Update:2021-04-02 01:08 IST
மதுரை, 
மதுரை தல்லாகுளம் விநாயகர் நகரில் இயங்கி வரும் வங்கிக்கு வந்த ஒருவர் தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என கூறி உள்ளார். அவர் கொண்டு வந்த நகைகளை நகை மதிப்பீட்டாளர் சோதனை செய்தபோது அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகத்தினர், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 26 கிராம் கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்