புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;

Update:2021-04-07 01:13 IST
புதுக்கோட்டை, ஏப்.7-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 5 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்