தர்மபுரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.