தேர்தல் நடத்தை விதிமீறல்; 63 வழக்குகள் பதிவு
தேர்தல் நடத்தை விதிமீறல்; 63 வழக்குகள் பதிவு
ஊட்டி
சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதை மீறி செயல்படும் அரசியல் கட்சிகள் மற்றும் நிர்வாகிகள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 42 வழக்குகள், கூடலூர் தொகுதியில் 9 வழக்குகள், குன்னூர் தொகுதியில் 12 வழக்குகள் என மொத்தம் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.