மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன

திருவிளக்குறிச்சியில் மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன.

Update: 2021-04-12 20:11 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான 2 கறவை மாடுகள் பட்டியில் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 2 மாடுகளும் செத்தன. இது பற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) நாராயணசாமி உடனிருந்தார்.

மேலும் செய்திகள்