திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு
திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு.;
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது25). அவர் 15 வயதான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் திருமண ஆசை வார்த்ைத கூறி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரையும், மாணவியையும் தேடி வருகிறார்கள்.