கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு

கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-15 18:04 GMT
கிருஷ்ணராயபுரம்
8½ பவுன் நகைகள் திருட்டு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.வீரராக்கியத்தை சேர்ந்தவர் சேதுரத்தினம். இவரது மகன் அருண் (வயது 32). இவர் கடந்த 12-ந்தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் மறுநாள் 13-ந்தேதி காலை அருண் வீட்டிற்கு வந்து பார்த்தார். 
அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 8½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 
போலீசார் வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து அருண் மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்