மாட்டுவண்டி மீது லாரி மோதியதில் மாடு செத்தது

மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் மாடு செத்தது

Update: 2021-04-15 19:15 GMT
மங்களமேடு:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ெகாரக்கை கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மகன் கணேசன்(வயது 40). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்ல மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த ராட்சத லாரி திடீரென மாட்டு வண்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்