வாலிகண்டபுரம் அருகே காரும், மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதில் 3 பேர் படுகாயம்

வாலிகண்டபுரம் அருகே காரும், மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-04-17 20:48 GMT
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி துருவம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன்கள் கணேசன் (36), வீராசாமி (33). இவர்கள் 3 பேரும் வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட்டில் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தம்பை அருகே சென்றபோது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிள் மொபட் ஆகியவை அடுத்தடுத்து எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் செல்வராஜ் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்