தப்பாட்டம் அடித்து கலெக்டரிடம் மனு கொடுத்த கிராமிய கலைஞர்கள்
கொரோனா தடையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கோரி கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;
சிவகங்கை,
கொரோனா தடையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கோரி கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
பங்குனி மாதம் முதல் கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த திருவிழாக்களின் போது மேடை, நாடகங்கள் நடத்தப்படுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் தென் மாவட்டங்களில் வழக்கம்.
அனுமதிக்க வேண்டும்
இந்த நிலையில் சீசன்களில் மட்டுமே வருமானத்தை ஈட்டி ஆண்டு முழுவதும் தங்களது வாழ்வை நடத்திவரும் மேடை நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள், தடையின் காரணமாக வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தங்களுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.