மாமனாரை தாக்கிய மருமகன் கைது
மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்பிள்ளை (வயது 60). இவருக்கும், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளியை சேர்ந்த இவரது மருமகனான செந்தில்குமார் (41) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கருங்கலாப்பள்ளியில் இறந்துபோன செந்தில்குமாரின் பெரியப்பா வீட்டு துக்க காரியத்திற்கு சென்ற தங்கவேல்பிள்ளையை செந்தில்குமார் திட்டி தாக்கி உள்ளார். இதுகுறித்து தங்கவேல்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.