ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவ வீரர் தற்கொலை

Update: 2021-04-19 19:40 GMT
சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கே.கள்ளிகுடியை சேர்ந்தவர் சிவா(வயது 42). ராணுவ வீரரான இவர் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்