விஷம் தின்று பெண் தற்கொலை

விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-25 21:12 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராணி. இவர்களது மகள் மோனிஷா (வயது 21). கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் தகராறு செய்ய வேண்டாம் என்று மோனிஷா கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோனிஷா கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மோனிஷாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்