முககவசம் அணியாத 89 பேரிடம் அபராதம் வசூல்

முககவசம் அணியாத 89 பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-30 18:54 GMT
ராமநாதபுரம், 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ராமநாதபுரம் பகுதியில் 89 பேரிடம் முககவசம் அணியாததற்காக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்