முந்திரி தோப்பில் வாலிபர் பிணம்

முந்திரி தோப்பில் வாலிபர் பிணமாக தொங்கினார்

Update: 2021-04-30 19:32 GMT
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 29). கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த சில நாட்களாக வீட்டுக்கும் வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். அவரை கண்டுபிடித்து தருமாறு கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று விராலிப்பட்டியில் உள்ள முந்திரி தோப்பில் கார்த்திக்கின் உடல் அழுகிய நிலையில் பிணமாக தொங்கியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கார்த்திக்கின் தந்தையை அழைத்து வந்து காண்பித்தபோது தூக்கில் தொங்கியது கார்த்தி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்