மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது.

Update: 2021-05-01 18:42 GMT
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). இவர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வழக்கம்போல் பணியை முடித்து விட்டு சுப்பிரமணி தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணப்பாறையில் இருந்து குளித்தலை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், சரக்கு ஆட்டோ டிரைவரான மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த ரினோஅன்புராஜ் (42) என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்