அரியலூரில் திடீர் மழை

அரியலூரில் நேற்று திடீரென மழை பெய்தது.

Update: 2021-05-01 20:19 GMT
அரியலூர்:
அரியலூரில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் சுட்ெடரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 3 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து 15 நிமிடம் மழை பெய்தது. அப்போது குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மேகங்கள் கலைந்து, மீண்டும் கடும் வெயில் அடிக்க தொடங்கியது.

மேலும் செய்திகள்