குளத்தில் மூழ்கி விவசாயி பலி

மீன்சுருட்டி அருகே மாட்டை குளிப்பாட்டியபோது குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-05-06 20:12 GMT
மீன்சுருட்டி:

விவசாயி சாவு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள வன்னியர்குழி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்(வயது 41). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில் உள்ள வன்னியர்குழி குளத்தில் தனது பசுமாட்டை குளிப்பாட்டுவதற்காக ஓட்டிச்சென்றார்.
மாட்டை குளத்தில் குளிப்பாட்டியபோது, குபேந்திரன் நிலை தடுமாறி தண்ணீரில் முழ்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குளத்தில் இறங்கி அவரை தேடினர். தண்ணீருக்குள் இருந்து அவரை மீட்டு வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து அவருடைய மனைவி அன்பரசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்பரசி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து, குபேந்திரனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்