திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து

திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-06 20:53 GMT
செம்பட்டு, 
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் பெங்களூரு மற்றும் சென்னைக்கு மட்டும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்து மீண்டும் சென்னை செல்லும் விமான சேவை மற்றும் இரவு 9.15 மணிக்கு திருச்சிக்கு வந்து சென்னை செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதியம் நேர சேவை வழக்கம்போல் இயங்கும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்