குப்பைகளுக்கு தீ வைத்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

வடவள்ளி அருகே குப்பைகளுக்கு தீ வைத்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.

Update: 2021-05-06 21:34 GMT
வடவள்ளி

வடவள்ளி கல்வீரம்பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் உஷா (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் குப்பைகளுக்கு தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அவர் உடல் முழுவதும் பரவியது.  இதில் அவர் வலியால் அலறி துடித்தார்.  இதனைக்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்