நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.;

Update:2021-05-07 20:51 IST
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. சமீபத்தில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

பின்னர் சென்னையில் இருந்து கூடுதலாக தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 45 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வந்தனர். 

அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் செய்திகள்