ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானார்கள்.

Update: 2021-05-08 15:41 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானார்கள்.
655 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
3,032 பேருக்கு சிகிச்சை
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 451 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 245 இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட 3,032 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
3 பேர் பலி
திருப்பூரை சேர்ந்த 70 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுபோல் 30 வயது வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருப்பூரைச் சேர்ந்த 70 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணிப்பேட்டை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்