குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் தனது பெட்டி கடையில் வைத்து மது விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன் (வயது 51). என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 136 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.