கடற்கரையோரத்தில் முதியவர் பிணம்

கடற்கரையோரத்தில் முதியவர் பிணம்.

Update: 2021-05-18 10:53 GMT
காஞ்சீபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி குப்பம் கிராம கடற்கரையோரமாக கடந்த 20-ந்தேதியன்று சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து நெம்மேலிகுப்பம் கிராம நிர்வாக அதிகாரி, மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்