நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு 4 டன் ஆக்சிஜன் வருகை

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு 4 டன் ஆக்சிஜன் வந்தது.

Update: 2021-05-19 19:59 GMT
நெல்லை, மே:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகளுக்காக அவசர தேவைக்கு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 டன் ஆக்சிஜன் இஸ்ரோவில் இருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன், அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு கொள்கலனில் குழாய் மூலம் ஏற்றி நிரப்பப்பட்டது.

மேலும் செய்திகள்