தீவிர ஊரடங்கு மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் திரிந்த குரங்குகள்

செங்கல்பட்டு மாவட்டம், தீவிர ஊரடங்கு மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் திரிந்த குரங்குகள்.

Update: 2021-05-20 05:26 GMT
கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள். தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த நிலையில் குரங்குகள் அதிகம் உள்ள பேரூராட்சிக்குட்பட்ட கொத்திமங்கலம் பகுதியில் நேற்று காலை ஏராளமான குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உணவு மற்றும் தண்ணீர் தாகம் தீர்க்க தெருக்களில் சுற்றி் திரிந்தன. சில குரங்குகள் அங்குள்ள வீடுகளின் வாசல்களில் அமைதியாக அமர்ந்து இருந்தன.

மேலும் செய்திகள்