சிவகங்கையை அடுத்த மதகுபட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவை கடந்த 10 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மின்வாரியத்தில் பொதுமக்கள் கட்ட வேண்டிய மின்கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எனவே உடனடியாக இந்த பகுதியில் இண்டர்நெட் சேவை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.