நாகமலைபுதுக்கோட்டை
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை அறிவித்தது. பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் பொது வெளியில் சுற்றிய 50 பேரை பிடித்த போலீசார், அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.