காஞ்சீபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை மறந்து தடுப்பூசி செலுத்த அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலரும் கெரோனா தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் சமூக இடைவெளியை மறந்து கொரோனா தடுப்பூசி போடுவதற்காக குவிந்தனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 89 ஆயிரத்து 132 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.