உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 8 பேர் கைது

உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது சம்பந்தமாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-03 04:23 GMT
உத்திரமேரூர், 

உத்திரமேரூரில் சுற்றியுள்ள பகுதிகளில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார், உத்திரமேரூர் எம்.ஜி.ஆர்,நகர், வேடபாளையம், கருவேப்பம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதிகளில் 100 லிட்டருக்கும் மேலான சாராய ஊரல் போடப்பட்டிருப்பது கண்டுபிடித்து போலீசார் அதை எடுத்து கீழே கொட்டி அழித்தனர். இது சம்பந்தமாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்