பேரையூர்,
பேரையூர் போலீசார் எஸ்.மேலப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் அனுமதி இல்லாமல் அதே ஊரை சேர்ந்த பெருமாள் (வயது 58) என்பவர் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டு வரும்போது போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.