ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கிலும் போக்குவரத்து நொிசல்
ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கிலும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது.;
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் அங்குமிங்கும் சென்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகமானது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.