கிருமிநாசினி தெளிப்பு

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2021-06-07 13:35 GMT
திருப்பரங்குன்றம், 
மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் பெரிய ஊராட்சி ஒன்றியமாக திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்திற்குள் தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல அலுவலங்கள் உள்ளன. கிராமமக்கள் வந்து செல்லக்கூடிய இந்த அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் மற்றும் கிருமிநாசினி தெளிக்கப்படாத நிலை இருந்து வந்தது. மேலும் அலுவலகத்திற்கு வந்து செல்லக்கூடியவர்கள் கைகழுவதற்கு வசதியாக சோப்புக்கூட வைக்கப்படாத நிலை இருந்து வந்தது. இதனால் அலுவலகத்திற்கு வந்து சென்றவர்கள் அவதிப்பட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகத்தின் வெளிப்புறம் முழுவதுமாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்