கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-07 17:39 GMT
நாகமலைபுதுக்கோட்டை, 
நாகமலைபுதுக்கோட்டை அண்ணாதுரை மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஸ்ரீனிவாசா காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்த போது ஸ்ரீனிவாசா காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 28) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார், 125 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்