சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-10 16:09 GMT
பேரையூர்,ஜூன்
பேரையூர் தாலுகா அ.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவர் டிகல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகி உறவினர்கள் முன்னிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.
இது குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் ராதாமணி அந்த  சிறுமியிடம் விசாரணை செய்தார். பின்னர் இது குறித்து பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக உறவினர்களான பெருமாள், மாரியம்மாள், பால்பாண்டி, நாகஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்