திருமங்கலம்,ஜூன்.
திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பொன்னன் மகன் பால் இளங்கோவன் (வயது 29). கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வடகரை புதூர் செல்லும் ரோட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.