ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம்
ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
பேரையூர், ஜூன்.
பேரையூர் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா விதிமீறல்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஊரடங்கு விதிகளை மீறி திறந்து வைத்திருந்த 17 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
மேலும் முகக்கவசம் அணியாத 40 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.