ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று ஒரே நாளில் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தனர்

Update: 2021-06-12 19:11 GMT
மதுரை
மதுரையில் நேற்று ஒரே நாளில் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தனர்.
279 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் மாவட்டத்தில் நேற்று 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 9 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பாசோதனை செய்ததில் 279 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 205 பேர் நகர்பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது.
1,420 பேர் குணமடைந்தனர்
மேலும் நேற்று ஒரே நாளில் 1420 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 927 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை சேர்ந்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், சிகிச்சை பெறுவேரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று மதுரையில் 5 ஆயிரத்து 936 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி நர்சு மகாராணி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதவிர மதுரையில் நேற்று 6 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1022 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்