லாரி பறிமுதல்

லாரி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-06-15 19:59 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே நடுவக்கோட்டை பகுதியில் திருமங்கலம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரியாபட்டியில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு எழுமலை நோக்கி சென்ற லாரியை சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி மண் அள்ளியது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த கல்லுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமாரை கைது செய்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்