மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

Update: 2021-06-16 19:07 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள காங்கேயநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அதிகாரி ரமேசுக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட மணல் அள்ளும் கும்பல் டிராக்டரை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்